kalyanamurangai

இலைகளுக்கு இடையே கூர்மையான முட்கள் அமைந்திருக்கும், மரம் சற்று முருங்கை காயின் தோற்றத்தில் இருப்பதால் முள்ளு முருங்கை ஆயிற்று.

கல்யாண முருங்கை. `Erythrina Indica’  என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இதை, `முள் முருங்கை’, `முருக்க மரம்’, `கல்யாண முருக்கன்’, `முள் முருக்கு’ என்ற பெயர்களிலும் அழைப்பார்கள். இதன் இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் பயன்கள்கொண்டவை.

கன்னிப்பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாணமுருங்கை இருக்க வேண்டும் என்பது பழமொழி. பெண்களின் நன்மைக்காக இயற்கை அளித்த வரம் கல்யாண முருங்கை. பெண்களுக்கு பெண்தன்மையை அளிக்கும் ஹர்மோன் சுரப்பிகளை சீராக வைத்திருக்கும் சிறப்பான கீரை.

பயன்கள்  (BENEFITS):

  • சுண்ணாம்புச்சத்து(Calcium), நார்சத்து(Fiber), இரும்புசத்து(Iron) மிகுந்தது.
  • கர்ப்ப பிரச்சனைகளை(Utrerus) சரிசெய்யும். கருசிதைவிளிருந்து(Abortion) சிசுவைக் காப்பாற்றும். பெண் மலட்டுத் தன்மையை நீக்கும்.
  • மாதவிடைக் காலத்தில்(Menstrual) அதிக வயிற்றுவலி ஏற்படுவதையும், அதிக உதிரிப்போக்கு இருப்பதையும் தடுக்கும்.
  • பாலூட்டும் தாய்மார்களுக்கு(Breast Feeding) பால் அதிகம் சுரக்க உதவும்.
  • சிறுநீரகப்(Kidney) பிரச்சனையை சீர்செய்யும்.
  • சூட்டு நோய்கள், பித்தநோய்களை(Bile) கட்டுப்படுத்தும்.
  • காய்ச்சல்(Fever) அடக்கும். உடலை வலுப்படுத்தும்(Strong).
  • கல்யாண முருங்கை இலை, முருங்கைக்கீரை, மிளகு, பூண்டு இவற்றை சூப்வைத்து குடித்தால் ரத்தசோகை(Anemia) குணமாகும்.
  • குளிர்காலத்தில் கல்யாண முருங்கை இலையுடன் மிளகு சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் சளித்தொல்லை(Cold) இருக்காது.
  • கல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளித்தால் உடலில் ஏற்படும் சொறி, சிரங்கு குணமாகும்.
  • கல்யாண முருங்கை இலையுடன் ஒரு ஸ்பூன் ஊறவைத்த வெந்தயம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுத்தல், வெட்டை குணமாகும்.
  • கல்யாண முருங்கை இலைச் சாறு 30 மில்லியுடன் பூண்டுச்சாறு 30 மில்லி சேர்த்து அரிசி கஞ்சியில் கலந்து 30 நாள் சாப்பிட ஆஸ்துமா(Asthma) குணமாகும். புலால், புகை, போகம் தவிர்க்கவும்.
  • கீல்வாயு குணமாக தேவையான அளவு இலைகளை இலேசாக நசுக்கி, வதக்கி, இளஞ்சூடான நிலையில், பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும்.
  • இலைச்சாறு 10 மி.லி.யுடன் வெந்நீர் 10 மி.லி. கலந்து குழந்தைக்கும் கொடுக்க கீரிப்பூச்சி(Worms) வெளியேறும். கபம், இருமல்(Cough) தீரும்.
நன்றி: திரு நம்மாழ்வார் அய்யா அவர்கள்