Payirgalinvalarchikku

  • பயிர்களின் வளர்ச்சிக்கு  16 வகையான ஊட்டசத்துக்கள் தேவைப்படும் .
  • பயிர் வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படும் சத்துக்கள் பேரூட்டச்சத்துக்கள் எனப்படும்.
  • பயிர் வளர்ச்சிக்கு குறைவாக தேவைப்படும் சத்துக்கள் நுண்ணூட்டச்சத்துக்கள்  எனப்படும்.
பேரூட்டச்சத்துக்கள்

தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, சுண்ணாம்புச்சத்து, கந்தகச்சத்து, மெக்னீசியம்சத்து முதலியன அதிகளவில் தேவைப்படும் எனவே இவை பேரூட்டச்சத்துக்கள் எனப்படும்.

நுண்ணூட்டச்சத்து
  • இரும்புச்சத்து, துத்தநாக சத்து, மாங்கனீசு சத்து, மாலிப்டின சத்து. தாமிர சத்து, போரான் சத்து,  பயிர்களுக்கு குறைந்த அளவே தேவைப்படுவதால் இவை நுண்ணூட்டச்சத்து எனப்படும்.
  • குளோரின் சத்து, சோடியம் சத்து, அலுமினியம் சத்து, சிலிகான்சத்து. பயிர் வளர்ச்சிக்கு மிக மிகச் குறைந்த அளவே தேவைப்படும் இவை பயிர் விளைவிக்கும் சத்துக்கள் எனப்படும்.
தாவரம் –  தாவரத்தில் உள்ள சத்துக்கள்,  பயன்கள்:

ஆவாரம் இலை

சத்து :  மணிச்சத்து

பயன்  : மணி பிடிக்க உதவும்

முருங்கை இலை,  கருவேப்பிலையில்

சத்து :  இரும்புச்சத்து உள்ளது

பயன் :   பூக்கள் நிறைய பிடிக்கும்

எருக்கம் இலை

சத்து  :  போரான் சத்து உள்ளது-

பயன் :   காய், பூ, அதிகம் பிடிக்கும்

காய்,   கோணலாகமல் இருக்கும்

புளியந்தலை

சத்து  :   துத்தநாக சத்து

பயன் :   செடியில் உள்ள இலைகள் சிறியதாக இல்லாமல் ஒரே சீராக  இருக்கும்.

பயிரின் வளர்ச்சி அதிகரிக்கும்

செம்பருத்தி, அவரை இலை

சத்து :  தாமிர சத்து,

பயன் : தண்டுப்பகுதி மெலிந்து காணப்படாது

கொளுஞ்சி, தக்கபூண்டு

சத்து  : தழைச்சத்து

பயன் :  பயிர் செழித்து காணப்படும்

துத்தி இலை

சத்து :  சுண்ணாம்புச் சத்து( கால்சியம் கார்பனேட்)

பயன் :   சத்துக்களைப்  பயிரின் பாகங்களுக்கு பிரித்துக் கொடுக்கும்.

எள்ளுச்செடி

சத்து :  கந்தகம்( சல்பர்)

பயன் :    செடி வளர்ச்சி அதிகரிக்கும்-

தண்டு மெலிந்து இருக்காது மஞ்சள் கலராக மாறாது

வெண்டை இலை

சத்து :   அயோடின்(சோடியம்)

பயன் :     மகரந்தம்  அதிகரிக்கும்

மூங்கில் இலை

சத்து :      சிலிக்கா

பயன் :    பயிர் நேராக இருக்கும்

பசலைக்கீலை

சத்து :       மெக்னீசியம்

பயன் :     இலை ஓரம் சிவப்பாக மாறாது

அனைத்து பூக்களிலும்

சத்து :      மாலிப்டினம்

பயன் :      பூக்கள் உதிராது

நொச்சி :  பூச்சிகளை விரட்டும்

வேம்பு  :  புழுக்கள் வராமல் பாதுகாக்கும்

வளர்ச்சி ஊக்கியாக தயாரிக்கும் முறை

அனைத்து தழைகள் ஒவ்வொன்றிலும்; அரைக்கிலோ வீதம் எடுத்துக் கொள்ள வேண்டும்

அவற்றுடன்  கோமியம் அரை லிட்டர்

நாட்டுச் சர்க்கரை அரைக்கிலோ

சோற்றுக் கற்றாலை மடல் 1

தயிர் அரை லிட்டர்

செய்முறை
  • மேலே உள்ள ஒவ்வொரு தழைகளிலும்  அரைக்கிலோ அளவு எடுத்து நன்றாக இடித்து மண்பானையில்  போட்டு மூழ்கும் அளவு தண்ணீர்  ஊற்ற வேண்டும்.
  • அவற்றுடன் அரைக்கிலோ  நாட்டுச் சர்க்கரையையும், அரைலிட்டர் கோமியத்தையும் சேர்க்க வேண்டும்.
  • அதன்பிறகு ஒரு சோற்றுக்கற்றாழை மடலில் உள்ள தோலை நீக்கி விட்டு சதைப் பகுதியை எடுத்து மிக்சியில் போட்டு அடித்து அவற்றையும் ஒன்றாக கலக்கி ஒரு வாரம் வரை வைத்திருக்க வேண்டும் .
  • ஒரு வாரம் கழித்து  எடுத்து வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி  என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்
  • தெளிக்கும் பொழுது ஒரு டேங்க்குக்கு ஒரு எலுமிச்சம் பழம் சாறு எடுத்து கலந்து தெளிக்கலாம்.
நன்றி: திரு நம்மாழ்வார் அய்யா அவர்கள்