எந்த விஷப்பூச்சி கடிக்கும் கடித்தவுடன் கடித்த இடத்தில் சிறிது சுண்ணாம்பு தடவி சிறிது மிளகை ( Lime Stone + Pepper ) வாயில் போட்டு மெல்ல வேண்டும்.
எந்த விஷப்பூச்சி கடிக்கும் மக்காச்சோளமாவு, சமையல் சோடா (Corn flour + Baking soda ) இரண்டையும் கலந்து வெது வெதுப்பான நீருடன் சேர்த்து பூச்சி கடித்த இடத்தில தடவினால் வலி குறையும்.
சுண்டைக்காய், மிளகு, கறிவேப்பிலை, இவைகளை ஒன்றாகச் சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வந்தால், வயிற்று கிருமிகள், பூச்சிக்கடி குறையும்.
பூரான் கடித்தால் உடல் முழுதும் தடிப்புகள் உண்டாகும். ஊமத்தை வேரை சிறிது சிறிதாக வெட்டி நல்லெண்ணெயில் போட்டு குழைத்து வெயிலில் வைத்து ஊற வைத்து எடுத்து உடல் முழுதும் தடவினால் பூரான் கடியினால் உண்டாகும் தடுப்புகள் குறையும்.
பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.
எறும்புகள் போன்ற பல்வேறு விஷமில்லா பூச்சிகள் கடித்து வலி ஏற்பட்டால் உடனே வெங்காயத்தை நறுக்கி கடித்த இடத்தில் தேய்க்க வேண்டும். வெங்காயம் தேய்க்க தேய்க்க வலி காணாமல் போய் விடும்.
அரணை நக்கிச் சென்றாலே விஷம். சீமை அகத்தி இலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பூச்சி கடித்த இடத்தில் தடவினால் விஷம் குறையும்.
வண்டு,பூச்சி கடிக்கு வெள்ளைபூண்டை அரைத்து கடிவாயில் கட்ட விஷம் முறியும்.
தேனீ, குளவி கொட்டினால் மாங்காய் காம்பில் இருந்து வழியும் பாலை கடிவாயில் தடவினால் விஷம் இறங்கும். அல்லது கடிவாயில் சுண்ணாம்பு தடவினால் வீக்கம் குறைந்து விஷமும் இறங்கும்.
தேனீ, குளவி கடித்தால் தாங்க முடியாத வலி ஏற்படும். அதற்கு மாங்காய் காம்பில் இருந்து வடியும் பாலை கடித்த இடத்தில தடவினால் வலி குறையும்.
தேள் கடி மிகவும் ஆபத்தான ஒன்றாகும். தாங்க முடியாத வலி ஏற்படும். மிளகுடன் தேங்காய் சேர்த்து மென்று சாப்பிட்டால் தேள் கடி விஷம் குறையும். வெள்ளை பூண்டை அரைத்து விழுதாக்கி பூச்சி கடித்த இடத்தில் தடவினால் விஷம் முறிந்து வலி குறையும். புளியை கரைத்து சிறிது குடித்து விட்டு தேள் கொட்டிய இடத்தில சிறிது தடவினால் விஷம் முறிந்து வலி குறையும். தேன், எலுமிச்சைச் சாறு இரண்டையும் குழைத்து கடிவாயில் தடவினாலும் விஷம்.
எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். இறங்கி வலி குறையும்.
கம்பளி பூச்சியின் ரோமம் உடலில் பட்டாலே உடல் முழுதும் அரிப்பு எடுக்கும். கம்பளிப் பூச்சியின் ரோமம் உடலில் பட்டால் நல்லெண்ணெயை உடலில் தடவினால் அரிப்பு நீங்கி வலி குறையும். முருங்கை இலையை அரைத்து தடவினாலும் அரிப்பு குறையும். அரிப்பு ஏற்படும் இடத்தில வெற்றிலையை வைத்து சாறு வரும் வரை தேய்த்தாலும் அரிப்பு குறையும்.
நன்றி: திரு நம்மாழ்வார் அய்யா அவர்கள்